/* */

திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

thirumangalam robbery news - திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை. மர்ம நபர்களுக்கு தனிப்படை போலீசார் வலைவீச்சு.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
X

பைல்படம்.

thirumangalam robbery news - மதுரை திருமங்கலம் அருகே 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி அறையில் தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், நடிகர் வடிவேலு போல் வீட்டின் சமையலறைக்குள் சென்று அங்கிருந்த உணவு, குளிர்சாதன பெட்டியில் இருந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு 3 பவுன் நகைகள், 10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், அருகே இருந்த மாயகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருளாயி அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளனர். அப்போது, திடுக்கிட்டு எழுந்த இருளாயி கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபர்களை விரட்டிச் சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தியதில் 2 வீடுகளிலும் அந்த கும்பல் 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியது தெரியவந்துள்ளது.

Updated On: 31 May 2022 8:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!