/* */

மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை

தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை

HIGHLIGHTS

மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை
X

மதுரையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தமிழக அரசு பொதுஇடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்லவும் தடை விதித்தது. சமூக இடைவெளியைக்கடைப்பிடித்து வீட்டிலேயே மக்கள் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசு வேண்டுகோளும் வைத்திருந்தது. அதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அவரவர்கள் இல்லத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அவல் பொரி, வடை, அப்பம், இட்லி, முக்கனிகள், பால், பருப்பு பாயசம் உள்ளிட்ட பொருள்களுடன் படையல் வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .

மேலும், பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால், கோவில் வாசலில் நின்றபடி சுவாமியை வழிபட்டு சென்றனர். சிறிய பிள்ளையார் கோயில்களில், சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபட்டனர். தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Sep 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!