சிம்னி விளக்கு ஏற்றி எஸ்டிபிஐ கட்சியினர் நூதனப் போராட்டம்
அநியாய மின்கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தி மதுரை தினமணி தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
சிம்னி விளக்கேற்றி எஸ்டிபிஐ (தெற்கு) கண்டன ஆர்ப்பாட்டம்
மக்களை வதைக்கும் அநியாய மின்கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தி மதுரை தினமணி தியேட்டர் அருகே மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆப்பிரிக்கான் வரவேற்புரை நிகழ்த்தினார் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ.கட்சி மாநிலத் துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் எஸ். காஜா மைதீன், நேஷனல் உமன் பிரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜு நிஷா, தெற்கு தொகுதி செயலாளர் எம். பி. பாஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி (தெற்கு) மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமான பங்கேற்று, சிமினி விளக்கை கையிலேந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.