/* */

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்
X

மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு வெங்கடேசனும், சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி ப சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியசாமி,பெரியகருப்பன், மெய்யநாதன், பழனிவேல் தியாகராசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, பூமிநாதன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சட்டமன்ற உறுப்பினர்கள் , தோழமைக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.


இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாரதப் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். மோடி ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் பணம் போடுவோம் என்றார். ஆனால் அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் திட்டமானது 10 ஆண்டுகளாக கானல் நீராக உள்ளது .

பாஜக அரசு மக்கள் விரோத அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவ முன் வரவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பார்த்து ஆறுதல் கூறுவதற்கு கூட மோடி வரவில்லை. பிரதமர் மோடி எதிர் கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில், முதலமைச்சர்களை பழிவாங்கும் நோக்கில் மோடி செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 11 April 2024 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!