Begin typing your search above and press return to search.
இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
கோவிலுக்குச் சொந்தமான மருது என்ற ஜல்லிக்கட்டு காளை, உடல் நல குறைவால் உயிரிழந்தது.
HIGHLIGHTS

மதுரைதிடீர் நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன்ஜல்லிக்கட்டு காளை, உடல் நல குறைவால் உயிரிழந்தது.
மதுரையில் உயிரிழந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான மருது என்ற ஜல்லிக்கட்டு காளை, உடல் நல குறைவால் உயிரிழந்தது. மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன்கோவிலில், ஜல்லிக்கட்டு காளையான மருது, அனைத்து வீர விளையாட்டுகள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியின் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது. இந்நிலையில், இந்த காளையானது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்தது. அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.