Begin typing your search above and press return to search.
மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி
மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிற்பகல் பெய்த கனமழையால், பக்தர்கள் அவதிப்பட்டனர். மதுரை நகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. கள்ளழகர் ,மதுரை தேனூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . அதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் . திடீரென, பெய்த மழையால் பக்தர்கள் அவதியுற்றனர். இன்று முற்பகல், மதுரை நகரில் வெப்பம் அதிகம் காணப்பட்டது. அதை தணிக்கும் வகையில், பலத்த மழை பெய்தது. மதுரை நகர் மட்டுமல்லாமல், மதுரையை ச் சுற்றியுள்ள மேலூர், ஒத்தக்கடை, கருப்பாயூரணி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.