Begin typing your search above and press return to search.
மதுரையில் இரண்டாம் நிலை காவலர் பணி நியமன உத்தரவை போலீஸ் எஸ்.பி. வழங்கல்
தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,அறிவுரை வழங்கினார்
HIGHLIGHTS
மதுரையில், போலீஸாருக்கு காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் பணி நியமன உத்தரவு வழங்கி வாழ்த்தினார்.
மதுரையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில், மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த 202 பெண்கள், 49 ஆண்கள் மொத்தம் 251 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வான, 251 நபர்களையும் மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து, தமிழக அரசு வழங்கிய பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்து கூறினார்.மேலும், அவர்களுக்கு தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,அறிவுரை வழங்கினார்.