/* */

மதுரையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

மதுரையில் வியாபாரிகள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மதுரையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்
X

பைல் படம்.

இதுகுறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், தெருவோர வியாபாரிகள், ஹோட்டல்கள், தேநீர், அடுமனை மற்றும் நகைக்கடை மற்றும் ஜவுளிக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தவறாமல் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கீழசித்திரை வீதி , தெற்கு சித்திரை வீதி என மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . முக்கியமாக மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்யும் நேரத்தில் தடுப்பூசி போடாதது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 100 நபர்களுக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 8428425000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Sep 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!