Begin typing your search above and press return to search.
சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனி வார விழா
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள், சமூக இடைவெளியை விட்டு, பெருமாளை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.