Begin typing your search above and press return to search.
இலவசமாக UPSC/TNPSC வகுப்புகள் :மதுரை கலெக்டர் அறிவிப்பு
மதுரை அருகே அலங்காநல்லூரில் UPSC/TNPSC பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெற உள்ளது என கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
அலங்காநல்லூரில் READY தொண்டு நிறுவனம் நடத்தும் குடிமைப்பணி தேசிய மற்றும் மாநில தேர்விற்கான UPSC/TNPSC பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர 100 மாணவ, மாணவியர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பம் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்.
http://bit.ly/ready_application_2022
மேலும் விபரங்களை அறிய கைப்பேசி எண . 9976745854
இதற்கான அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ளார் .இப்பயிற்சியின் மூலம் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பாக இருக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.