/* */

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டம்

மதுரை அருகே பரவையில், பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டம்
X

பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினர்.

மதுரை, பரவை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது அதிமுகவினர் 2 பேர் வாக்களித்த நிலையில், திடீரென திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வாக்குபெட்டியை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அன்புச்செல்வன், துரை சரவணன் ஆகிய இருவரும் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுகவினரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு, திமுகவினரிடம் தேர்தல் விதிமுறைகளை கூறியும், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பேருராட்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 4 March 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...