Begin typing your search above and press return to search.
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
கிருஷ்ணகிரி–வேப்பனஹள்ளி சாலையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இளவரசி, எஸ்.ஐ.க்கள், சிவசாமி, தென்னரசு உள்ளிட்ட இன்று காலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி– வேப்பனஹள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற சான்ட்ரோ காரை மடக்கி சோதனையிட்டதில், 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் வேப்பனஹள்ளி பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. காரை ஓட்டி வந்த வேப்பனஹள்ளி, மஜீத் தெருவை சேர்ந்த இம்ரான் (20) என்பவரை கைது செய்து கார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.