/* */

ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: கல்லறைக்கு மலர் தூவி வழிபாடு

ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் சாமந்தி மலர்களால் அலங்கரித்திருந்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: கல்லறைக்கு மலர் தூவி வழிபாடு
X

பூக்காளால் அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையின் சமாதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பூனபள்ளி கிராமத்தில் பிஎம்சி கரியான் என்ற ஜல்லிக்கட்டு காளை இந்த பகுதியில் புகழ்பெற்றது. இளம் கன்றுகுட்டியிலிருந்து வளர்க்கப்பட்ட காளைமாடு கிராமத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது. மாநிலத்தில் பல மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட எருது விடும் விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கி குவித்தது.

கெலமங்கலம் பூனபள்ளி கிராமத்திற்கு பெருமை தேடித்தந்த பிஎம்சி கரியன் தொடர்ந்து கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது. இந்த நேரத்தில் தான் செல்லமாக வளர்க்கப்பட்ட பிஎம்சி கரினுக்கு உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு இதே நாளில் பரிதாபமாக இறந்தது. பின்பு ஊர்மக்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக டிராக்டரில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

அந்த காளையின் நினைவு நாள் இன்று கிராமத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. சாமந்தி மலர்களால் அலங்கரித்து நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Nov 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது