/* */

கிருஷ்ணகிரி கல்குவாரியில் வாகனத்தின் மீது பாறை விழுந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி அருகே கல்குவாரியில் வாகனத்தின் மீது பாறை விழுந்து வாலிபர் பலி. எம்எல்ஏ குவாரி என்பதால் போலீசார் வழக்கு பதியாமல் பேரம்

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி கல்குவாரியில் வாகனத்தின் மீது பாறை விழுந்து வாலிபர் பலி
X

கிருஷ்ணகிரி அருகே குவாரியில் பாறை விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த வாலிபர் ராகுல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி திமுக எம்எல்ஏ வாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதியழகன். இவருக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் அதனை ஒட்டி மேல்பட்டி என்ற இடத்தில் கல்குவாரியும் செயல்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அவரது தொழிற்சாலை மற்றும் கல்குவாரிகள் தொடர்ந்து நூறு சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் ஹிட்டாச்சி வாகனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேலே இருந்த பாறைகள் ஹிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்தது. இதில் ராகுல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின்பு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இன்றி சக ஊழியர்களே அவர்களை மீட்டனர்.

இந்த நிலையில் இந்த குவாரி தற்போதைய திமுக எம்எல்ஏ மதியழகன் என்பவருக்கு சொந்தமானது என்பதால் இது குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டிய மகாராஜகடை காவல்துறை, வழக்கு பதிவு செய்யாமல் பேரம் பேசி அனுப்பி வைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அரசியல் பலத்தை வைத்து எம்.எல்.ஏ.கல்குவாரியை தொடர்ந்து நடத்தி வருகிறார் இதனை தடுக்க வேண்டிய கனிமவளத் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 24 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!