/* */

நிழல்குடை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரியில் நிழற்கூடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

நிழல்குடை  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
X

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல். அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணிகள் நிழல்குடை

கிருஷ்ணகிரியில் பேருந்து நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல்., அலுவலகம் அருகில் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பஸ் நிறுத்தம் கடந்த, 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் அமர்வதற்கான மேடைகள் உடைந்தும், பராமரிக்கப்படாமலும் இருந்ததால், அப்பகுதி அருகே தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் தங்கள் உடைமைகளை வைக்கும் இடமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதையும் கடைகாரர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், பயணிகள் பிஎஸ்என்எல்., அலுவலக வாசலில் சாலையில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். வளைவான அப்பகுதியில் பஸ்கள் நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களும் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தினந்தோறும் வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. பயணிகளை ஏற்ற ஷேர் ஆட்டோக்களும் அப்பகுதியிலேயே நிறுத்துகின்றனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் பயனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் நிழல் குடையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்