நிழல்குடை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரியில் நிழற்கூடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
HIGHLIGHTS
கிருஷ்ணகிரியில் பேருந்து நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல்., அலுவலகம் அருகில் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பஸ் நிறுத்தம் கடந்த, 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் அமர்வதற்கான மேடைகள் உடைந்தும், பராமரிக்கப்படாமலும் இருந்ததால், அப்பகுதி அருகே தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் தங்கள் உடைமைகளை வைக்கும் இடமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதையும் கடைகாரர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், பயணிகள் பிஎஸ்என்எல்., அலுவலக வாசலில் சாலையில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். வளைவான அப்பகுதியில் பஸ்கள் நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களும் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தினந்தோறும் வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. பயணிகளை ஏற்ற ஷேர் ஆட்டோக்களும் அப்பகுதியிலேயே நிறுத்துகின்றனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் பயனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் நிழல் குடையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.