Begin typing your search above and press return to search.
கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.90 கோடி அபராதமாக, அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 39 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் 54 பேரும், 30 பேர் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி சிறப்பு மையத்திலும், 7 பேர் ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி சிறப்பு மையத்திலும், மற்றவர்கள் வீடுகளில் தனிமையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 422 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 469 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 90 லட்சத்து ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.