/* */

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது; 16 ஊராட்சியில் உள்ள 9012 ஏக்கர் பாசன வசதி பெறும்.

HIGHLIGHTS

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
X

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு,  மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தண்ணீரை திறந்து வைத்தார். 

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து, ஆண்டுதோறும் இரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 9012 ஏக்கர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நீர்வரத்து அதிகரித்து, அதன் முழு கொள்ளளவான 52 அடியில் இருந்து தற்போது 51.70 கன அடி அளவிற்கு நீர் மட்டம் உள்ளது. இதனையடுத்து கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தென்பெண்ணை ஆற்றின் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கை அடுத்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு , மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தண்ணீரை திறந்துவிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று முதல், 120 நாட்களுக்கு வலது மற்றும் இடது புற கால்வாய் மூலமாக 180 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரிய முத்தூர் சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்ட அள்ளி, தளி அள்ளி, குண்டலபட்டி, காவேரிப்பட்டினம், பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் பாசனம் பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 30 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது