/* */

கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் கே.ஆர்.பி.அணையில் கரைப்பு

கிருஷ்ணகிரியில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று கே.ஆர்.பி. அணையில் பொதுமக்கள் கரைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் கே.ஆர்.பி.அணையில் கரைப்பு
X

 கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் விநாயகர் சிலைகளை  கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடைவிதித்திருந்தது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைளை வைத்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளான இன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.

கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் வீடுகளில் வைத்திருந்த சிறிய விநாயகர் சிலை மற்றும் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகளை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் கரைத்தனர்.

இதையொட்டி அணையின் பின்புறம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சிலையை கரைக்க ஒன்றிரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலம் இன்றி காரில் கொண்டு வந்து அணையில் கரைத்தனர். இன்று மாலை வரை 75க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

Updated On: 12 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!