/* */

கிருஷ்ணகிரி அணை உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட வேண்டும் என வாய்க்கால் பாசன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அணை உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
X

கிருஷ்ணகிரி அணை.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை ஏரிகளுக்கு திறந்துவிட வேண்டும் என வாய்க்கால் பாசன சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி அண நீடிப்பு உபரிநீர் இடது வாய்க்கால் பாசன பயன்பெறுவோர் சங்கம் சார்பில், தர்மபுரி நீர்வள ஆதாரத்துறை செயயற்பொறியாளருக்கு இன்று கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறப்பதற்கு முன், பாலேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு ஏரியை நிரப்ப வேண்டும்.

இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பி ஆற்றில் திறக்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளது. எனவே முதலில் 28 ஏரிகள் நிரம்ப வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?