/* */

கிருஷ்ணகிரி: வீடுகளிலேயே பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

கொரொனா காரணமாக, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: வீடுகளிலேயே பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
X

கொரொனா தொற்று காரணமாக, கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள், அவரவர் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அன்பையும் தியாகத்தையும் வெளிக்காட்டும் விழா பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார், தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக, ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையிலும், ஈகை திருநாளில் பலி தருதல் என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும்.

அவ்வகையில் இன்று அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து கொடுத்து இஸ்லாமியர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். கொரோனா தொற்று காலம் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று மசூதிகளில் தொழுகையில் ஈடுபடாமல், அவரவர் வீடுகளிலேயே தொழுகை மேற்கொண்டனர். பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

Updated On: 21 July 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?