/* */

மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேர் கைது

பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் சேலம் மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட சரவணன், சந்தோஷ் மற்றும் சரத்.

சேலம் சோளம்பள்ளம் மல்லப்பன்மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பலவாணன். இவர் சேலத்தில் மரக்கடை மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரும் சேலம் கிழக்கு திருவாக்கவுண்டனூர் வசந்த நகரை சேர்ந்த ஜோசப் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் ஜோசப் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு வங்கியில் ரூ.30 லட்சம் கடன் பெற்றார். அந்த பணத்தை கட்ட முடியாததால் வீடு ஏலத்திற்கு வந்தது. இது குறித்து ஜோசப் தனது நண்பரான அம்பலவாணனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அம்பலவாணன், சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சரவணன் என்பவரிடம், ரூ.30 லட்சம் உடனடியாக வேண்டும். அந்த பணத்தை வட்டியுடன் தந்துவிடுவதாக கூறி கடன் பெற்றுள்ளார். இதையடுத்து அந்த பணத்தை வங்கியில் கட்டி, வீட்டு பத்திரத்தை மீட்டனர். இந்நிலையில், சரவணன் கொடுத்த பணம் ரூ.30 லட்சத்தை, அம்பலவாணனிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அம்பலவாணன் மற்றும் அவரது நண்பர் ஜோசப் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் அம்பலவாணனுக்கும், சரவணனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (25ம் தேதி) இரவு கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக டூவிலரில் சேலத்தில் இருந்து வந்துள்ளார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் சாலையோரம், தனது நண்பருடன் நின்று அம்பலவாணன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கு காரில் வந்த சரவணன் உள்ளிட்ட மூன்று பேர், அம்பலவாணனை தாக்கி, காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதை பார்த்த அவரது நண்பர், இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி, டிஎஸ்பி சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அம்பலவாணனை, அந்த கும்பல் எந்த வழியாக கடத்தி செல்கின்றனர் என்பதை கண்காணித்தனர். அந்த கார் தொப்பூர் டோல்கேட்டை கடந்து சேலம் நோக்க செல்வதை அறிந்த அவர்கள், இது குறித்து சேலம் மாநகர போலீசாரின் உதவியுடன் ரெட்டிப்பட்டியில் அம்பலவாணனை கிருஷ்ணகிரி போலீசார் மீட்டனர்.

மேலும், அவரை கடத்திய சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சரவணன், அவரது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர்கள் சந்தோஷ், சரத்(எ)சாஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த காரையும் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். மேலும், இது குறித்து அம்பலவாணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்ட சரவணன் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!