/* */

பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

கரூர் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்பு.

HIGHLIGHTS

பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து
X

லாரி விபத்தில் சிக்கிய ஓட்டுரை மீட்கும் முயற்சி.

திண்டுக்கல் மாவட்டம் டி. கூடலூரைச் சேர்ந்தவர் சுப்புராமன் லாரி ஓட்டுநர். இவர் இன்று காலை கரூரிலிருந்து ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கரூர் அருகே திருச்சி சாலையில் உப்பிடமங்கலம் பிரிவில் சுப்புராமன் ஓட்டிச் சென்ற லாரி, முன்னால் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராமல் மோதியது. இந்த விபத்தில், சுப்புராமன் ஓட்டிச் சென்ற லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. நொறுங்கிய லாரிக்குள் சுப்புராமன் சிக்கிக் கொண்டார்.

விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் பொக்கலைன் உதவியுடன் லாரியின் சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தி சுப்புராமனை மீட்டனர். இந்த விபத்தில் சுப்புராமன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா