/* */

உப்பிடமங்கலம் சந்தையில் கட்டிடங்கள் பழுது: சீரமைத்தால் சிறப்பு

உப்பிடமங்கலம் சந்தையில் கட்டிடங்கள் பழுதாகி உள்ள நிலையில், அவற்றை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

HIGHLIGHTS

உப்பிடமங்கலம் சந்தையில் கட்டிடங்கள் பழுது: சீரமைத்தால் சிறப்பு
X

கரூர் அருகே, உப்பிடமங்கலத்தில், பழுதடைந்த கட்டடங்களுடன் உள்ள சந்தை.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் அருகே உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை சந்தை நடக்கிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மேலும், வெளிமாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் உப்பிடமங்கலம் சந்தைக்கு வந்து செல்கின்றனர். மாடுகள் சந்தைக்கும் உப்பிடமங்கலம் பெயர் போனது. ஆனால், உப்பிடமங்கலம் சந்தை பேட்டையில், கடை அமைக்கும் பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், சில கட்டடங்களும் பழுதடைந்துள்ளன.

இதனால், போதிய இடவசதி இல்லாமல், வியாபாரிகள் திறந்த வெளிப்பகுதியில் சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், உப்பிட மங்கலம் சந்தைபேட்டையில், பழுதான கடைகளை சீரமைக்கவும், கூடுதலாக கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 5 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’