Begin typing your search above and press return to search.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.42.51 கோடி கடன் வழங்கல்
கரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42.51 கோடி கடனுதவிகளை, ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.
HIGHLIGHTS
கரூரில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நகராட்சி பல்நோக்கு மைய கட்டடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், இவ்விழா நடைபெற்றது.
இதில், திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழா வாயிலாக, காணொளி காட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்த, கரூர் மாவட்டத்தில் உள்ள, 155 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 14,463 உறுப்பினர்களுக்கு, ரூ.42.51 கோடி மதிப்பில் தொழிற்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.