கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
டெல்டா பாசனத்திற்காக நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றிலிருந்து பாசன வசதி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்
அப்போது அவர் செய்தியாளரிடம் பேசுகையில் நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது இதையொட்டி பாசனத்திற்கான அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன
இதில் கரூர் மாவட்டத்தில் 10 பணிகள் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பாசன வாய்க்கால்கள் மற்றும் 6 வடிகால் 60 கிலோ மீட்டருக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றனஇந்த பணிகள் மூலம் 9 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார்.