/* */

கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும் அச்சம்

கரூரில் ஊரடங்கு தளர்வால் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அச்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும் அச்சம்
X

கரூரில் ஊரடங்கு தளர்வில் அச்சம் இன்றி பொதுமக்கள் கூட்டமாக கடைவிதிகளில் பொருட்களை வாங்க குவிந்தனர்.

கரூரில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து தினசரி சந்தைகளில் கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளி மறந்து மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10ந் தேதி அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் 24ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கரூரில் தினசரி சந்தைகளான உழவர் சந்தை மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.

இதனால் முக்கிய சாலைகளான பழைய பை - பாஸ் சாலை, ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஜவஹர் பஜார் உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On: 23 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா