/* */

அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட செவிலியர்கள் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு செவிலியர்கள்.

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமபுறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும்.

தாய், சேய் நலப் பணி பாதிக்காத வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அளிக்க வேண்டும். முழு வீரியத் தன்மையுடன் பொதுமக்களுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். சமுதாய நல செவிலியர்களுக்கு 50 சதவீத தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 19 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?