/* */

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிகாரிகளுடன் தேர்தல் பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிகாரிகளுடன் தேர்தல் பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆய்வு நடத்தினர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வாகன தணிக்கை, பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் கண்காணிப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், கரூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் செலவின பார்வையாளர் போஸ் பாபு அல்லி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை. பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், ஆவணங்கள் சரிபார்ப்பிற்குபின் திருப்பி வழங்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், வேட்பாளர்களின் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் குறித்தும் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. அதனை தேர்தலில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் முழுமையாகவும், முறையாகவும் பின்பற்ற வேண்டும். பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாகவும், தீவிரமாகவும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.

வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா என்பதனை வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாகவும், சந்தேகத்திற்குட்பட்டும் பணம் எடுத்தல், பணம் வரவு வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்களின் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும். சிவிஜில் செயலி குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த செயலியில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பதிவிட்டிருந்தால் உடனடியாக மறுப்பு பதிவு வெளியிட செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளஅனைத்து அலுவலர்களும் திறம்பட தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. டாக்டர்.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி இயக்குநர் வருமான வரி சுதர்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் பொறுப்பு அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் வருவாய் கோட்டாட்சியருமான முகமது பைசூல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (அரவக்குறிச்சி) கருணாகரன். கிருஷ்ணராயபுரம் சுரேஸ், தேர்தல் அலுவலர்கள் சையது காதர், முருகன் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2024 12:20 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?