Begin typing your search above and press return to search.
ஆபத்து ஏற்படுத்தும் வகையி இருந்த தேன் கூடு அழிப்பு
பள்ளி அருகில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தேன் கூட்டை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.
HIGHLIGHTS
வாங்கல் அருகே என்.புதூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் ஒரு புங்கமரம் உள்ளது. அதில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் பள்ளிக்கு சென்றனர். அங்கு புங்க மரத்திலிருந்த மலைத்தேனீக்கள் கூட்டை தண்ணீரை பீச்சி அடித்து அழித்தனர்.