/* */

கரூரில் அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்

Karur News,Karur News Today-சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கரூர் அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

கரூரில் அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்
X

Karur News,Karur News Today- சித்திரை திருவிழாவை முன்னிட்டு கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Karur News,Karur News Today- சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கரூர் அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினமும் மாலை அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், ஐந்து தலை நாக வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரெங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரெங்கநாதர் தேரில் எழுந்தருளினார்.

பின்னர் காலை 8.10 மணியளவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் மேட்டுத்தெரு, தேர்வீதி தெரு, ஆலமரத்து தெரு, ஜவகர்பஜார் வழியாக ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று தீர்த்தவாரி இன்று (வெள்ளிக்கிழமை) அமராவதி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு ரெங்கநாதர் சுவாமி யானையுடன் கூடிய லட்சுமி வாகனத்திலும், கல்யாண வெங்கடரமண சுவாமி ஐந்துதலை நாக வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். நாளை (சனிக்கிழமை) ஆளும் பல்லக்கும், 7-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 8-ம் தேதி ரெங்கநாதர் சுவாமியுடன், கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் திருவிழா நிறைவை முன்னிட்டு வண்ணப்பூக்களால் வேள்வி நடக்கிறது.

Updated On: 5 May 2023 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு