Begin typing your search above and press return to search.
கரூரில் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த கலெக்டர்
கரூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்று, நோயாளிகளிடம் நலம் விசாரித்து ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 152 படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் வஞதிக்காக 48 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து, தமிழக அரசு கொரோனா தொற்றாளர்களுக்கு அனைத்து சிகிச்சையும் அளிக்க உத்தரவிட்டிருப்பதாக கூறி ஆறுதல் அளித்தார்.
அந்த சிகிச்சை மையத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களையும் ஆட்சியர் பாராட்டினார்.