/* */

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஓட்டம்; மாட்டு வண்டிகள் பறிமுதல்

அமராவதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஓட்டம்; மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

பைல் படம்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வெங்கல்பட்டில் என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அமராவதி ஆற்றுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர்.

பின்னர், சட்டவிரோதமாக மணல் அள்ளிய பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகளை சின்னதாராபுரம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்