Begin typing your search above and press return to search.
குமரியில் அரசின் தடை உத்தரவால் களையிழந்த விநாயகர் சிலை விசர்ஜனம்
அரசின் தடை உத்தரவால் குமரியில் விநாயகர் சிலை விசர்ஜனம் களையிழந்து காணப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில் பல ஆயிரக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த விநாயகர் விசர்ஜனம் நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் 4 நாட்களாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ளதால், குமரியில் விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெற வில்லை.
அதன்படி ஊர்வலங்கள் இன்று தனி நபர்கள் மட்டும் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே குமரியில் பல்வேறு இடங்களில் சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் எளிமையான முறையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.