/* */

குமாரகோவில் முருகனுக்கு காவடி வழிபாடு செய்த போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர்

குமாரகோவில் முருகனுக்கு குமரி போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

குமாரகோவில் முருகனுக்கு காவடி வழிபாடு செய்த போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர்
X

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த்ட்ட காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர்.

குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் குமாரகோவில் முருகனை வேண்டியும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். இந்நிலையில் இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குமாரகோவிலுக்கு பாரம்பரிய காவடி ஊர்வலம் நடந்தது.

தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் பால்குடம் மற்றும் 2 புஷ்ப காவடிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பொதுப்பணித்துறை சார்பில் புஷ்ப காவடி எடுத்து செல்லப்பட்டு குமாரகோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

Updated On: 10 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது