/* */

பொதுமக்களுக்காக மொபைல் சேவை: அசத்தும் குமரி போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் வாட்ஸ் அப் மொபைல் எண் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்களுக்காக மொபைல் சேவை: அசத்தும் குமரி போலீசார்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில், வாட்ஸ் அப்புடன் கூடிய மொபைல் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது: கொரோனா தொற்று குறித்த தீர்வுகளுக்காக, பொதுமக்களின் வசதிக்காக 7010363173 என்ற காவல்துறை வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எண் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை பெற முடியும். மாவட்டத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு உள்ளாக காவல்துறையின் சேவையை பெற முடியும்.

அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொது இடத்தில் கூட்டம் இருப்பின், அது குறித்து தெரியப்படுத்தினால் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் இந்த மொபைல் எண் பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 11 May 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...