/* */

குமரியில் அரசு பேருந்துகளின் போக்குவரத்து தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியது.

HIGHLIGHTS

குமரியில் அரசு பேருந்துகளின்  போக்குவரத்து தொடங்கியது
X

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்ததை கருத்தில் கொண்டு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்தை இயக்க உத்தரவிட்டது.

அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளின் இயக்கம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது.மாவட்டத்தில் மொத்தம் 12 பணிமனைகளில் உள்ள 788 பேருந்துகளில் 520 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்பட்டன.

பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்து இருந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் இயக்கப்பட்டு பேருந்துகளில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் முக கவசம் அணிந்து வந்த பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்தனர்.

Updated On: 28 Jun 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...