/* */

திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது - உதயநிதி ஸ்டாலின்

திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது - உதயநிதி ஸ்டாலின்
X

முந்தைய அதிமுக அரசு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் சுமையை உருவாக்கி விட்டு சென்று இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் அதிமுக ஆட்சியை விட்டு செல்லும் போது 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு கஜானாவை காலியாக்கி சென்றனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

அதிமுக ஆட்சியின்போது ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது, ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத ஆட்சி காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டும் தான், அதேபோன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகவும் முகஸ்டாலின் உள்ளார் என வடநாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன என தெரிவித்தார்.

Updated On: 15 Feb 2022 12:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’