/* */

மக்களின் நிலையறிந்து ரேசனில் தரமான அரிசி வழங்க வேண்டும் - எம்.ஆர் காந்தி

தமிழக அரசும் உணவு வழங்கும் துறையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியினை வழங்கவேண்டும்.

HIGHLIGHTS

மக்களின் நிலையறிந்து ரேசனில் தரமான அரிசி வழங்க வேண்டும் - எம்.ஆர் காந்தி
X

எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ

கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு அறிவித்து இருப்பதால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் உணவை சமைத்து சாப்பிடுவதற்கு அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான மற்றும் மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் அரிசியினை வழங்க வேண்டும் தற்போது வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக சமைத்து சாப்பிட முடியாத அளவில் உள்ளது.

பொருளாதார சுமை இருப்பதால் வெளிச்சந்தையில் தேவையான அரிசி பணம் கொடுத்து வாங்கும் நிலையில் பொதுமக்கள் இல்லை. எனவே தமிழக அரசும் உணவு வழங்கும் துறையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Updated On: 22 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!