/* */

ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
X

தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியை சமரசம் செய்து அழைத்துவரும் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடக்க முடியாத நிலையிலும் தட்டுத் தடுமாறி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

வயது முதிர்ந்த காலத்தில் தன்னை ஏமாற்றி ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை உறவினர்கள் அபகரித்து விட்டதாக கூறியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மூதாட்டியிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 20 July 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!