/* */

ரயிலில் தவறவிட்ட 46 பவுன் தங்க நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

குமரியில் ரயில் பயணி தவறவிட்ட 46 பவுன் தங்க நகை கொண்ட பையை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்தனர் ரயில்வே போலீசார்.

HIGHLIGHTS

ரயிலில் தவறவிட்ட 46 பவுன் தங்க நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
X

ரயிலில் பயணி தவறவிட்ட 46 பவுன் தங்க நகையை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த ரயில்வே போலீசாருக்கு பாெதுமக்கள் பாராட்டு.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சரவணன் (38) என்பவர் குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் தனது மனைவியின் 46 பவுன் நகைகளையும் கையுடன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பைகளையும் இறக்கி வைத்தனர், அப்போது மறதியாக நகைகள் இருந்த பையை ரயிலில் விட்டுவிட்டனர். இந்நிலையில் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றுவிட்டது. தங்களது பைகளின் எண்ணிக்கையை சரவணன் சோதனை செய்தபோது நகை இருந்த பையை ரயிலில் தவற விட்டது தெரிய வந்தது.

இது குறித்து சரவணன் நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உடனடியாக கன்னியாகுமரி சென்ற ரயிலில் உள்ள போலீசாரிடம் பயணி தவறவிட்ட பை குறித்தும் அதில் இருந்த நகைகள் குறித்தும் தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் இருந்த பையை மீட்டனர். மேலும் நகையுடன் இருந்த பையை நாகர்கோவில் ரயில்வே காவல் நிலையம் கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் சுஜாதா முன்னிலையில் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 26 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  3. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  5. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  6. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  7. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  8. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...