/* */

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 ஆவது குடியரசு தின விழா கன்னியாகுமரியில் கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.

நாட்டின் 73- வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 273 பேருக்கு பாராட்டு சான்றிதல்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதோடு விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!