/* */

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

குமரியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வழங்கினார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு கபசுர குடிநீர் குடித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி , நாகர்கோவில் மாநகர ஆணையர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...