/* */

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி - பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி - பாஜகவுக்கு அதிமுக ஆதரவு
X

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று கடந்த 22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீனா தேவிற்கு அதிமுக முழு ஆதரவு அளித்துள்ளது. இன்று நாகர்கோவிலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் முன்னிலையில் பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் சந்தித்து அறிமுகமாகினர்.

தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம் நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜகவை சேர்ந்த மேயர் வேட்பாளர் மீனாதேவ்க்கு அதிமுக தலைமை ஒப்புதலுடன் அதிமுக கவுன்சிலர்கள் முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

Updated On: 1 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்