/* */

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு

குமரியில் கிராமங்களில் புகுந்த காட்டாற்று வெள்ளத்தால் 13 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு
X

அணைக்கள் திறப்பால் கடையாலுமூடு, பத்துகாணி உள்ளிட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் தற்போது 44 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் தற்போது 74 அடியாகவும் உள்ளது.

இதே போன்று சிற்றாறு 1, 2 பொய்கை அணை உள்ளிட்ட அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது, இந்நிலையில் அணைகளில் இருந்து வினாடிக்கு 7200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அணைக்கள் திறப்பால் கடையாலுமூடு, பத்துகாணி உள்ளிட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது, மேலும் காட்டாற்று வெள்ளமானது சாலைகளையும் குடியிருப்புகளையும் ஆக்கிரமித்து உள்ள நிலையில் குமரியில் 13 மலைகிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

Updated On: 29 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது