Begin typing your search above and press return to search.
வாகன விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்: குமரி எஸ்பி அஞ்சலி
குமரியில் வாகன விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக கிறிஸ்டல் பாய் (45) பணிபுரிந்து வந்தார். பணியின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்டல் பாய், மார்த்தாண்டம் அருகே நடந்த விபத்தில் மரணமடைந்தார்.
அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்டல் பாய் திருவுருவ படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், ஆளினர்கள் உட்பட பலர் கிறிஸ்டல் பாய் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.