/* */

முப்படை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: 2 வழக்கறிஞர்கள் மீது வழக்கு

குமரியில் முப்படை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட இரு வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு.

HIGHLIGHTS

முப்படை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: 2 வழக்கறிஞர்கள் மீது வழக்கு
X

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்தார்.

இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை இருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியும் வழக்கறிஞருமான சிவராஜ பூபதி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சியின் மாவட்ட செலாளரும் வழக்கறிஞருமான சி.எம். பால்ராஜ் ஆகிய இருவர் மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153(A), 504, 505(2) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இருவரும் சமூக வலத்தளங்களில், "பாஸிஸ்ட்களின் கைக்கூலி சர்வாதிகாரி பிபின் ராவத்துக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்" என குறிப்பிட்டு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த வழக்கு பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Updated On: 16 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு