/* */

குமரியில் தொடர் மழையால் களையிழந்த தாேவாளை மலர் சந்தை

குமரியில் பெய்து வரும் கனமழையால் புகழ்பெற்ற தோவாளை மலர் சந்தை விற்பனையின்றி களை இழந்தது.

HIGHLIGHTS

குமரியில் தொடர் மழையால் களையிழந்த தாேவாளை மலர் சந்தை
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை பூக்கள் விற்பனைக்கு தமிழகம் மற்றும் கேரளா அளவில் மிகவும் புகழ் வாய்ந்தது.

இங்கு மதுரை, ஓசூர், திண்டுக்கல் மற்றும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும். இதைப்போல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் குமாரபுரம், தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விடிய விடிய இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

தொடர் மழை காரணமாக பொதுமக்களும் உள்ளூர் பூ வியாபாரிகளும் பூக்கள் வாங்க வராத காரணத்தால் பூக்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...