/* */

தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு

குமரியில் தை அமாவாசை தர்ப்பணம் செய்து முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு
X

கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முக்கடல் சங்கமிக்கும் ஆன்மீக ஸ்தலமான கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் வழிபாடு செய்தால் கர்ம வினைகள் அகன்று புண்ணியம் கிடைக்கும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும், வாழ்வு வளமாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக உள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் இருந்த தடையை விளக்கிய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதியான நாளை முதல் கடற்கரைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில் பல நூற்றாண்டு காலமாக தை அமாவாசை நாளில் நடைபெறும் பலி தர்ப்பணம் நிகழ்ச்சிக்காக இன்று முதல் கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்து இயக்கங்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தை அமாவாசை நாளான இன்று முக்கடல் சங்கமிக்கும் ஆன்மீக ஸ்தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதற்காக அதிகாலை முதலே கன்னியாகுமரியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் அங்கு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Updated On: 31 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...