/* */

குமரியில் 2.0 ஆப்ரேஷன் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை ஏற்பாடு

குமரியில் 2.0 ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமரியில் 2.0 ஆப்ரேஷன் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை ஏற்பாடு
X

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்கள். 

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாதம் ஆப்ரேஷன் நடத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி மாவட்டம் தோறும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போதையில்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், சமூகநல துறை அதிகாரி சரோஜினி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொலைபேசி எண் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 2 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  7. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  8. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  9. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  10. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?