/* */

நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்

இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரில் பணம் வசூல் நடைபெறும் நிலையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்
X

அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள், செய்தியாளர்களை சந்தித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இணைந்து தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி வசூலிக்கும் போலி கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது: கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சேவையாற்றி வருவதாகவும், ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களை வழங்கி உதவி புரிந்து வருவதாகவும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் அனைத்து தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

எனினும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் எங்களது கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் சிலர் ஈடுபட்டு வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளோம். மேலும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்தால் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என, இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Updated On: 1 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை